அண்மைய செய்திகள்

  
-

சிலாபத்துறை பகுதியில் வைத்து 1 கோடி 54 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளுடன் 3 பேர் கைது-(படம்)

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை பகுதியில் வைத்து இன்று புதன் கிழமை(7) காலை சுமார்  ஒரு கோடியே 54 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளை மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் 3 சந்தேக நபர்களையும் பெலிஸார் கைது செய்துள்ளனர்.

-மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.சியந்த பீரீஸ் அவர்களின் வழி காட்டலின் கீழ் செயல் பட்ட மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் மூலம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை பகுதியில் வைத்து நேற்று புதன் கிழமை (7) காலை சுமார்  ஒரு கோடியே 54 இலட்சம் ரூபாய் பெறுமதியான 154 கிலோ கிராம் எடை கொண்ட  கேரளா கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதோடு, சிலாபத்துறை பகுதியை சேர்ந்த 3 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 3 சந்தேக நபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதோடு,விசாரனைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
-மன்னார் நிருபர்-




சிலாபத்துறை பகுதியில் வைத்து 1 கோடி 54 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளுடன் 3 பேர் கைது-(படம்) Reviewed by Author on February 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.