வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் 11 சிறுவர் கடத்தல், 123 துஷ்பிரயோகம்
வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் 2017 ஆம் ஆண்டு, 123 சிறுவர்கள் பாலி யல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள் ளார்கள் என்பதுடன், 11 சிறுவர்கள் கடத்தப் பட்டுள்ளதாக நன்நடத்தை சிறுவர் பராமரி ப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ் மாவட்டத்திலேயே சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து காணப்படுவதாக மேற்குறித்த
புள்ளிவிபரத்தில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.
புள்ளி விபரத்தில் மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பதிக்கப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் 45 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 11 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 27 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 30 புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புள்ளி விபரத்தில் மேலும் தெரிவிக்கை யில், வடக்கு மாகாணத்தில் பாலியல் துஷ் பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தாக யாழ்.மாவட்டத்தில் 45 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 சிறுவர்க ளும், மன்னார் மாவட்டத்தில் 11 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 27 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 30 சிறுவர்களு மாக மொத்தமாக 123 சிறுவர்கள் பாதிக்க ப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சி மேற்கொண்டதில் யாழ் மாவட்டத்தில் 7 சிறு வர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 சிறு வர்களும், மன்னார் மாவட்டத்தில் 6 சிறு வர்களும், வவுனியா மாவட்டத்தில் 5 சிறு வர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 சிறு வர்களுமாக மொத்தம் 38 சிறுவர்கள் பாதி க்கப்பட்டுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று உடல் ரீதியான முறைகேட்டு க்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 சிறுவர்களும், மன்னார் மாவ ட்டத்தில் 14 சிறுவர்களும், வவுனியா மாவ ட்டத்தில் 9 சிறுவர்களும், கிளிநொச்சி மாவ ட்டத்தில் 23 சிறுவர்களுமாக மொத்தம் 67 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய் யப்பட்டுள்ளது.
உளரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட் படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட த்தில் ஒருவரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 21 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் ஒரு வரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 9 சிறுவர் களுமாக மொத்தம் 39 சிறுவர்கள் பாதிக்க ப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு தற் கொலைக்கு முயற்சி செய்ததாக யாழ் மாவ ட்டத்தில் 3 சிறுவர்களும், மன்னார் மாவட்ட த்தில் 4 சிறுவர்களும், வவுனியா மாவட்ட த்தில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 சிறுவர்களுமாக மொத்தம் 14 சிறுவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள் என யாழ்.மாவட்டத்தில் 23 சிறு வர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 6 சிறு வர்களும், வவுனியா மாவட்டத்தில் 13 சிறு வர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 13 சிறு வர்களுமாக மொத்தம் 67 சிறுவர்கள் பாதி க்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் 11 சிறுவர் கடத்தல், 123 துஷ்பிரயோகம்
Reviewed by Author
on
February 24, 2018
Rating:

No comments:
Post a Comment