வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு
வவுனியாவில் இன்று காலை 15ற்கும் மேற்பட்ட கைக்குண்டுகளை பூவரசங்குளம் பொலிசார் மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
வவுனியா பம்பைமடுப்பகுதியில் முன்னர் இராணுவத்தினரின் சோதனை நிலையமாக பயன்படுத்தப்பட்ட தனியார் காணி ஒன்றிலிருந்தே குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. காணியின் உரிமையாளரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலையடுத்து இன்று காலை அங்கு சென்ற பூவரசங்குளம் பொலிசார் அதனை மீட்டெத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு
Reviewed by Author
on
February 07, 2018
Rating:

No comments:
Post a Comment