கொத்துக் குண்டு தொடர்பில் இலங்கையிடம் விளக்கம் கோரும் ஐ.நா -
கொத்துக் குண்டுகள் தொடர்பான தமது முன்னைய செயற்பாடு குறித்து இலங்கையால் தற்போது பதில் வழங்க முடியும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கொத்துக்குண்டுகள் தொடர்பான சாசனத்தில் கைச்சாத்திட்ட 103 நாடாக இலங்கை 2018 மார்ச்சில் இல் இணைந்துள்ளது.
கொத்துக்குண்டுகள் மற்றும் நிலக்கண்ணிகள் தொடர்பான இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதன் அடிப்படையில், ஏற்கனவே தாம் பயன்படுத்திய கொத்துக்குண்டுகள் மற்றும் நிலக்கண்ணி வெடிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
இதன் கீழ் இலங்கை அரசாங்கம், இனிவரும் காலங்களில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தவோ அல்லது தயாரிக்கவோ முடியாது.
அத்துடன் அந்த உடன்படிக்கையை அமுல் செய்ய ஏனைய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இந்த நிலையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அரசாங்கத்தரப்பு என்ற அடிப்படையில் இலங்கையினால் உத்தியோகபூர்வமாக தமது முன்னைய செயற்பாடு குறித்து பதில் வழங்க முடியும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
போரின் போது கொத்துக்குண்டுகளை இலங்கை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற போதும், அரசாங்கத்தினரும் படையினரும் அதனை மறுத்து வருகின்றனர்.
இதேவேளை இந்த உடன்படிக்கைகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொத்துக் குண்டு தொடர்பில் இலங்கையிடம் விளக்கம் கோரும் ஐ.நா -
Reviewed by Author
on
March 16, 2018
Rating:

No comments:
Post a Comment