நிலை மாற்று நீதி பொறிமுறை தொடர்பான செயலமர்வு
மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பட்டறை நேற்று சனிக்கிழமை தொடக்கம் இன்று வரை17-18-03-2018 மன்னார் நகர சபை மண்டபத்தில் வளவாளர் சட்டதரணி திரு.ஐங்கரன் தலைமையில் இடம் பெற்றது.
நிலைமாற்றுநீதிக்கான பொறிமுறையின் பிரதான தூண்களாக(TJ)
- உண்மையைகண்டறிதல்-கலந்துரையடல்
- ஆற்றுப்படுத்தல்-இழப்பீடு-(உளவள ஆலோசனையும் உடமையும்)
- பொறுப்புக்கூற்தல் -தண்டைவழங்குதல் தீர்ப்பு வழங்குதல்
- நெறிமுறைப்படுத்தல்-மீண்டும் ந்டைபெறாமல் இருக்க வழிவகுத்தல்
- போர்குற்றம்
- மனிதாபிமான எதிரான குற்றம்;
- இனப்படுகொலை
- ஆக்கிரமிப்பு
இவ்வாறான பிரச்சினைகள் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வாக அமைந்தது.
இவ் பயிற்சி பட்டறையின் பின்னர் மன்னார் மாவட்த்தில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை எற்ப்படுத்தும் விதமாக நடைமுறை படுத்தக்கூடிய 65 ஆயிரம் பெறுமதியான திட்ட முன்மொழிவு வரையப்படடது அவ் வரைபானது வருகின்ற மே மாதத்துக்குள் பூர்த்தி செய்யபட உள்ளது என்பது குறிப்பிட தக்கது.
இச்செயலமர்வை தேசிய சமாதானப்பேரவை ஏற்பாடு செய்திருந்தது நிகழ்வை திரு மெடோசன் ஒழுங்கமைத்திருந்தார்.
வை.கஜேந்திரன்
நிலை மாற்று நீதி பொறிமுறை தொடர்பான செயலமர்வு
Reviewed by Author
on
March 19, 2018
Rating:

No comments:
Post a Comment