அண்மைய செய்திகள்

recent
-

6 மாதத்தில் 30 மில்லியன் பேர் உலகில் இறக்க போகும் ஆபத்து: பில்கேட்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல் -


உயிர் கொல்லி தொற்று நோய்களால் ஆறு மாதங்களில் 30 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் Massachusetts மருத்துவ சங்கம் மற்றும் இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் நிறுவனம் சார்பில் நடைபெற்ற தொற்று நோய்கள் குறித்த கலந்தாய்வில் இரு தினங்களுக்கு முன்னர் கலந்து கொண்டார்.
 
அப்போது பேசிய அவர், நம்மை நோக்கி உயிர் கொல்லி தொற்று நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதனால் ஆறு மாதத்தில் 30 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இதை எதிர்கொண்டு போராட நாம் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை போலியோ அல்லது மலேரியா போன்ற நோய்களிலிருந்து காப்பாற்றுவதில் நாம் முன்னேறியிருக்கலாம்.

ஆனால் தொற்று நோய்களை எதிர்கொள்வதில் உலகம் தயார் நிலையில் இல்லை.
போர் வந்தால் அதை சமாளிக்க எப்படி தயாராவோமோ அது போல உலகளவில் தொற்று நோய்களை எதிர்க்க நாம் தயாராக வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் உலகளவில் நோய்களை வரும் முன் தடுக்க போடப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்துவதில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது எனவும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனம் அதற்காக $12 மில்லியன் மானியங்களை வழங்கி வருவதாகவும் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
6 மாதத்தில் 30 மில்லியன் பேர் உலகில் இறக்க போகும் ஆபத்து: பில்கேட்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல் - Reviewed by Author on May 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.