ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மிகப்பெரிய விபத்து - கண்கலங்கிய ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை எடுப்பவர் என்றால் அது ஷங்கர் தான். தற்போது அவர் 2.0 படத்தை இயக்குவதில் பிசியாக உள்ளார்.
இந்நிலையில் அவர் இயக்கிய அந்நியன் படத்தில் ஒரு பிரம்மாண்ட சண்டை காட்சியை படமாகியபோது ஏற்பட்ட பெரிய விபத்து பற்றி மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா பேசியுள்ளார். விக்ரம் 100 சண்டை கலைஞர்களுடன் சண்டை போடும் காட்சி படமாக்கியபோது பலரையும் கயிறால் கட்டி ஒரு லாரியின் மூலம் இழுக்க முடிவெடுத்தோம். ஆனால் லாரி டிரைவர் ஓகே சொல்வதற்கு முன்பே செலுத்தியதால் 23 சண்டை கலைஞர்களுக்கு மேல் படுகாயம் ஏற்பட்டது.
"அதை பார்த்த ஷங்கர் கடும் அதிர்ச்சி ஆகிவிட்டார். சின்ன குழந்தை போல அழ துவங்கிவிட்டார்" என ஸ்டண்ட் சில்வா தெரிவித்துள்ளார். "மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அந்த காட்சியை மீண்டும் படமாக்கினார்களாம். ஆனால் ஷங்கர் அப்போது அங்கு இருக்கமுடியாது என கூறி வெளியில் சென்றுவிட்டார். நாங்கள் மட்டும் படமாக்கினோம்" என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மிகப்பெரிய விபத்து - கண்கலங்கிய ஷங்கர்
Reviewed by Author
on
May 17, 2018
Rating:

No comments:
Post a Comment