அண்மைய செய்திகள்

recent
-

13,000 அகதிகள்: சஹாரா பாலைவனத்தில் கைவிடப்பட்ட நிலையில் உணவு,தண்ணீர் இன்றி அவதி -


கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 13,000 அகதிகளை சஹாரா பாலைவனத்தில் கைவிட்டுள்ளதாக அல்ஜீரியா நாடு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்த சுமார் 13,000 அகதிகளை உணவு மற்றும் தண்ணீர் ஏதும் இன்றி சஹாரா பாலைவனத்திற்கு துரத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அந்த நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் வெளியான புகைப்படங்களில் நூற்றுக்கணக்கான அகதிகள் பாலைவனத்தின் கொடும் வெயிலில் பரிதவிப்பது பதிவாகியுள்ளது.
இதில் பலர் உணவு மற்றும் தண்ணீர் இன்றி மரணமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் சாஹார பாலைவனத்தில் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மீட்பு குழுவினர் குறித்த அகதிகளை மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அல்ஜீரியா கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இருப்பினும் கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அகதிகள் மேம்பாட்டுக்காக ஐரோப்பாவில் இருந்து சுமார் 111.3 மில்லியன் டொலர் உதவித் தொகையை பெற்றுள்ளது.
அல்ஜீரியா இதுவரை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய அகதிகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 2,888 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






13,000 அகதிகள்: சஹாரா பாலைவனத்தில் கைவிடப்பட்ட நிலையில் உணவு,தண்ணீர் இன்றி அவதி - Reviewed by Author on June 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.