அண்மைய செய்திகள்

recent
-

என்னை வலுக்கட்டாயமாக – அரசியலில் புகுத்தினார்கள் -வடக்கு மாகாண முதலமைச்சர் !!


ஆத்­மீ­கம், சட்­டம், சமு­தா­யம், சரித்­தி­ரம் என்று பல­தைப் பற்றிப் பேச்சுக்­களை ஆற்றி வந்து கொண்­டி­ருந்­தேன். அப்­பேர்ப்­பட்ட என்னை வலுக்­கட்­டா­ய­மாக இழுத்து வந்­து ­அ­ர­சி­ய­லில் புகுத்­தி­னார்­கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

காரை­ந­கர்- கள­பூமி திக்­கரை அருள்­மிகு முரு­க­மூர்த்தி கோவில், திரு­மஞ்ச வெள்­ளோட்­ட­மும், திரு­மஞ்­சத் திரு­வி­ழா­வும் நேற்றுமுன்­தி­னம் இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஆலய தரி­ச­னம் கோடி புண்­ணி­யம்! நான் நீதித்­துறை சேவை­யில் இருந்து ஓய்வு பெற்ற பின்­னர் வாரத்­துக்­கொரு முறை­யா­வது கோவி­லுக்குச் சென்று ஆற அமர அமர்ந்­தி­ருந்து இறை­வனை வணங்­கிப் பொழு­தைப்­போக்­கிக் கொண்­டி­ருந்­தேன்.

ஆத்­மீ­கம், சட்­டம், சமு­தா­யம், சரித்­தி­ரம் என்று பல­தை­யும் பற்றி பேச்சுக்­களை ஆற்றி வந்து கொண்­டி­ருந்­தேன். அப்­பேர்ப்­பட்ட என்னை வலுக்­கட்­டா­ய­மாக இழுத்து வந்­து ­அ­ர­சி­ய­லில் புகுத்­தி­னார்­கள். ஆத்­மீ­கம் எனது அர­சி­ய­லில் கலந்­த­தால் என்­னைப் பலர் வெறுப்­பு­டன் பார்த்­தார்­கள். கார­ணம்! உள்­ளதை உள்­ள­ப­டியே நோக்­கி­யமை தவறு என்று அவர்­கள் கூறி­னார்­கள். எனி­னும் என் பணி என் நோக்­கின் அடிப்­ப­டை­யில் தொ­டர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

முத­ல­மைச்­ச­ராக நான் பத­விப் பொறுப்­பேற்ற நாளி­லி­ருந்து எனது வதி­வி­டத்­துக்கு மிக அரு­கில் உள்ள நல்­லூர் கந்­தன் ஆல­யத்­திற்கே சென்று வழி­பட நேரம் அற்­ற­வ­னாக முழு­நே­ர­மும் அர­சி­யல் வேலை­க­ளில் மூழ்­கிக் கிடக்க வேண்­டி­யுள்­ளது.

மக்­கள் சேவையே மகே­சன் சேவை என்ற கூற்­றுக்கு அமை­வாக மக்­கள் சேவை­யில் ஈடு­பட்டு வரு­வ­தும் ஒரு வித்­தி­யா­ச­ மான மன­நி­றை­வைத் தரு­கின்­றது.

ஆல­யங்­கள் மன­ ஒ­டுக்­கத்­திற்­கும், சிந்­த­னைத் தெளி­விற்­கும், இறை­பக்தி வளர்­வ­தற்­கும் ­ஏற்ற இட­மா­கும். ஆனால் அவ்­வா­றான நன்­மை­ க­ளைப் பெற நாங்­கள் முயற்­சிக்­க­ வேண்­டும். வெறும் சம்­பி­ர­தா­யங்­க­ளும் சம­யச் சடங்குக­ளும் எம்மை இறை­வ­னு­டன் சேர்க்காது. மனந்­தி­றந்து நெஞ்­சு­ரு­கிப் பாடு­ப­வனே இறை­ய­ரு­ளைச் சுகிக்­கின்­றான்.

இந்த ஆலயப் பிர­கா­ரத்­தில் இன்­னொன்­றைக் கூற ஆசைப் ­ப­டு­கின்­றேன். கொடை வள்­ளல்­க­ளும், தர்­ம­வான்­க­ளும், வர்த்­த­கப் பெரு­மக்­க­ளும் வாழ்ந்து வரும் புண்­ணிய பூமி காரை­ந­கர். உங்­கள் வாழ்க்கை மேலும் விருத்தி அடைய வேண்டும் என்றால் வருமானங்களில் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்குத் தானஞ் செய்ய ஒதுக்கி வாருங் கள். எல்லாம் நல்லனவாகவே அமையும் – என்றார்.

என்னை வலுக்கட்டாயமாக – அரசியலில் புகுத்தினார்கள் -வடக்கு மாகாண முதலமைச்சர் !! Reviewed by Author on July 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.