அண்மைய செய்திகள்

recent
-

எருக்கலம்பிட்டி மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பரிசளிப்பு விழா -


மன்னார் வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட எருக்கலம்பிட்டி மகா வித்தியாலத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா எருக்கலம்பிட்டி மகா வித்தியாலய கல்லூரி அதிபர் செல்வரட்ணம் செல்வரஞ்சன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா, வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது கடந்த 2017ஆம் ஆண்டு கல்வியில் திறமை சித்தி பெற்ற மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் அதிபர்,ஆசிரியர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


எருக்கலம்பிட்டி மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பரிசளிப்பு விழா - Reviewed by Author on July 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.