அண்மைய செய்திகள்

recent
-

மெஸ்ஸியின் உலகக்கிண்ண கனவுக்கு ......


உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பின் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பலம் வாய்ந்த அணிகள் தொடரை விட்டு வெளியேறுகின்றன, கத்து குட்டி அணிகள் எல்லாம் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னெறி வருவது கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
அப்படி இந்த உலகக்கிண்ணம் தொடர் துவங்குவதற்கு முன்பே பலம் வாய்ந்த அணிகளின் வரிசையில் இருந்த அர்ஜெண்டினா அணி, பிரான்ஸ் அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் பரிதாபமாக தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

இந்த அணியில் பெரிதும் நம்பப்பட்ட மெஸ்ஸியின் மாயாஜாலம் ஒன்றும் எடுபடவில்லை.
அவரின் கால்பந்து வித்தை கிளப் அணிகளுக்கு விளையாடுவதில் மட்டும் தான் இருந்துள்ளது. ஆனால் அவர் பிறந்த அர்ஜெண்டினா நாட்டின் உலகக்கிண்ண போட்டி வெற்றிக்கு உதவாமலேயே போய்விட்டது
மெஸ்ஸி முதன் முறையாக 2006-ஆம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக விளையாடினார். அதன் பின் 2014-ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அணி உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. ஆனால் கிண்ணத்தை பெற்றுத் தர முடியவில்லை.



இதனால் அவர் தன்னுடைய ஒய்வை அறிவித்தார். அதன் பின்னர் ஓய்வு முடிவிலிருந்து பின்வாங்கி மீண்டும் விளையாடத்துவங்கினார்.
இந்நிலையில் தனது ஓய்வு உலகக் கிண்ண போட்டியின் முடிவைப் பொறுத்து அமையும் என தெரிவித்திருந்தார். ஆனால் பிரான்ஸ் அணியுடன் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அதன் விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் தன் ஓய்வை மெஸ்ஸி மீண்டும் அறிவித்துள்ளார்.
மெஸ்ஸியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மீண்டும் அவர் விளையாட வேண்டும் என்று தான் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
மெஸ்ஸியின் உலகக்கிண்ண கனவுக்கு ...... Reviewed by Author on July 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.