ஈழப்போரின் போது விஜயகாந்த் செய்த மிகப்பெரும் உதவி- இவர் தான் ரியல் ஹீரோ
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கே கடும் போட்டி கொடுத்த நடிகர். இவர் நல்ல உச்சத்தில் இருக்கும் போதே அரசியல் கட்சி தொடங்கி மேலும், மக்களிடையே பிரபலமடைந்தார்.
தமிழகத்தின் எதிர்க்கட்சி என்று சொல்லும் அளவிற்கு இவருடைய வளர்ச்சி அரசியலில் இருந்தது, இந்நிலையில் விஜயகாந்த் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 40 வருடங்கள் ஆகிவிட்டது.
இதற்காக சமீபத்தில் ஒரு சிறப்பு விழா நடக்க, இதில் சத்யராஜ் கலந்துக்கொண்டு விஜயகாந்தை புகழ்ந்து பேசினார்.
அப்போது ‘விஜய்காந்த் தான் ரியல் ஹீரோ, ஈழப்போர் நடந்த போது, இங்கு பல நடிகர்கள் யோசிக்க, விஜயகாந்த் உடனே மணிவன்னன் நடத்திய நாடகம் ஒன்றில் நடித்தார்.
அதில் வந்த பணத்தை அப்படியே அவர்களுக்கு கொடுத்து உதவினார், அதுமட்டுமின்றி தன் மகனுக்கு தலைவர் பிரபாகரன் பெயரை சூட்டியவர்’ என்று சத்யராஜ் பேசினார்.
ஈழப்போரின் போது விஜயகாந்த் செய்த மிகப்பெரும் உதவி- இவர் தான் ரியல் ஹீரோ
Reviewed by Author
on
August 01, 2018
Rating:

No comments:
Post a Comment