அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 134ஆவது மாதிரிக் கிராமமான 'வளனார் புரம்' பயணாளிகளிடம் கையளிப்பு-படங்கள்

நாடளாவிய ரீதியில் நடை முறைப்படுத்தப்படும் 'செமட்ட செவண' தேசிய வீடமைப்பு வேளைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் வாழிகாட்டலில் மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட 134 ஆவது மாதிரிக் கிராமமான 'வளனார் புரம்' மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று சனிக்கிழமை காலை 9 மணிளவில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

-மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு குறித்த 50 வீடுகளையும் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ், மன்னார்,நானாட்டான்,மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன்,ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமீயு முஹமது பஸ்மி உற்பட மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் பயணாளிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட 134 ஆவது மாதிரிக் கிராமமான 'வளனார் புரம்' மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் 06-10-2018 வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டு பயணாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, வீட்டிற்கான ஆவணங்களும் கையளிக்கப்பட்டது.

மேலும் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு மூக்குக்கண்ணாடிகள், சுயதொழில் பொருட்கள்,நிதி உதவிகள் என்பன வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.























மன்னாரில் 134ஆவது மாதிரிக் கிராமமான 'வளனார் புரம்' பயணாளிகளிடம் கையளிப்பு-படங்கள் Reviewed by Author on October 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.