மடு பிரதேசச் செயலகத்தின் நுழைவாயிலை மூடி மடு பிரதேச கிராமிய அமைப்புக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம்-படம்
மன்னார் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி மடு பிரதேச கிராமிய அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து இன்று புதன் கிழமை 23-01-2019 காலை மடு பிரதேசச் செயலக நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மடு பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் அனுசரனையில் குறித்த அமைதி ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இதன் போது மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 76 கிராமங்களைக் கொண்ட 25 கிராம மட்ட அமைப்புக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று புதன் கிழமை (23) காலை 8 மணியளவில் மடு பிரதேசச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடியதோடு,மடு பிரதேசச் செயலகத்தினுள் எவரையும் செல்ல விடாது கதவை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வீதிகள்,உள்ளக வீதிகள் செப்பணிடப்படாமை, வீதி மின் விளக்குகள் பொருத்தாமை, குடிநீர் வசதிகள் இன்மை, உரிய போக்குவரத்து சேவைகள் இல்லாமை,மருத்துவ சேவைகள் இல்லாமை, கசிப்பு உற்பத்தியை உடன் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை,வளங்கல் சுரண்டப்படுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கும் வகையில் மடு பிரதேசச் செயலாளர் ஜெயகரன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சார்வமத தலைவர்கள், மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் மடு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற இருந்த வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வருகை தந்த போது நுழைவு வாயிலில் மறித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்ததோடு,கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் மனேகணேசன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தான் உடனடியாக கவனம் செலுத்தி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றனர்.


மடு பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் அனுசரனையில் குறித்த அமைதி ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இதன் போது மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 76 கிராமங்களைக் கொண்ட 25 கிராம மட்ட அமைப்புக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று புதன் கிழமை (23) காலை 8 மணியளவில் மடு பிரதேசச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடியதோடு,மடு பிரதேசச் செயலகத்தினுள் எவரையும் செல்ல விடாது கதவை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வீதிகள்,உள்ளக வீதிகள் செப்பணிடப்படாமை, வீதி மின் விளக்குகள் பொருத்தாமை, குடிநீர் வசதிகள் இன்மை, உரிய போக்குவரத்து சேவைகள் இல்லாமை,மருத்துவ சேவைகள் இல்லாமை, கசிப்பு உற்பத்தியை உடன் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை,வளங்கல் சுரண்டப்படுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கும் வகையில் மடு பிரதேசச் செயலாளர் ஜெயகரன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சார்வமத தலைவர்கள், மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் மடு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற இருந்த வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வருகை தந்த போது நுழைவு வாயிலில் மறித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்ததோடு,கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் மனேகணேசன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தான் உடனடியாக கவனம் செலுத்தி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றனர்.
மடு பிரதேசச் செயலகத்தின் நுழைவாயிலை மூடி மடு பிரதேச கிராமிய அமைப்புக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம்-படம்
Reviewed by Author
on
January 23, 2019
Rating:
No comments:
Post a Comment