அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்ற தைப்பொங்கல் நிகழ்வு-படங்கள்

மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதய பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தைப்பொங்கல் நிகழ்வினை  புதன் கிழமை 23-01-2019 காலை  சிறப்பாக கொண்டாடினர்.

இன்நிகழ்விற்கு கறிற்ராஸ்-வாழ்வதய இயக்குனர் அருட்பணி செ. அன்ரன் அடிகளார் தலைமை தாங்கினார். குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் நகரமுதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிற்சன்   கலந்து சிறப்பித்தார்.

கறிற்ராஸ்-வாழ்வுதயத்தில் கணனி கற்கை நெறிகளை பயிலும் மாணவ மாணவிகளும் இஸ்லாம் மத மௌலவி முஹமட் அன்வர் அவர்களும் கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

 முதலில் தமிழ் பாரம்பரிய முறமைகளின் படி பொங்கல் இடம் பெற்றது. பின்னர் அழைக்கப்பட்ட பிரதம விருந்தினரை மாலை அணி வித்து வர வேற்றதுடன்,கறிற்ராஸ்-வாழ்வதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் அவர்களினால் பொங்கல் ஆசீர்வதிக்கப்பட்டதுடன் வாழ்வுதய மண்டபத்திற்கு அனைவரும் அழைத்துவரப்பட்டதோடு கலந்து கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து உழவர்களுக்கு விசேட நன்றிகளை தெரிவிக்கும் அடையாளமாக இறைவனுக்கு நன்றி வழிபாட்டினை நடாத்தினர்.

இவ்வழிபாட்டினைத் தொடர்ந்து கறிற்ராஸ்-வாழ்வதய இயக்குனர் அவர்களின் உரை இடம் பெற்றதுடன் பொங்கல் பகிர்வுகளும் சிறப்பாக இடம் பெற்றது.







மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்ற தைப்பொங்கல் நிகழ்வு-படங்கள் Reviewed by Author on January 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.