600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்... 8 பேர் கைது: வெளியான அதிர்ச்சி காரணம்-
அமெரிக்காவில் மாணவர்களுக்கான விசாவில் பயணிப்போர், அங்கு தங்குவதற்கான அனுமதியுடன், தங்கள் கல்வி தொடர்பான தொழில்துறையில் பணியாற்றவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் பர்மிங்டன் என்ற பெயரில் போலியாக பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதில் 600-க்கும் மேற்பட்டோர் பயில்வது போல் மோசடி செய்து அவர்களுக்கு விசாவும், பணி அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு போலியான பல்கலைக்கழகத்தில் பயில்வதாகக் கூறப்படும் 600 பேர் சிறை செல்லலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.
600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்... 8 பேர் கைது: வெளியான அதிர்ச்சி காரணம்-
Reviewed by Author
on
February 01, 2019
Rating:

No comments:
Post a Comment