கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியின் உச்சத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் -
முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தினை 3000 ரூபாய் முதல் 4000 வரை உயர்த்தி வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்து தொடர்பான கூட்டம் ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்களாக சுமார் 4500 பேர் கிழக்கு மாகாண சபையினுடைய பாலர் பாடசாலை முன்பள்ளி பணியகம், கல்வி அமைச்சின் நியமனத்துடன் கிழக்கு மாகாணத்தினுடைய முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றிவருகின்றனர்.
இவ் ஆசிரியர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக 3000 ரூபாய் விகிதம் மாதாந்த சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
இச்சம்பளம் தமக்கு போதாமை தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஆளுநருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக திறைசேரி கல்வி திறைசேரி திட்டமிடல் திணைக்களம் போன்றவற்றுடன் கலந்துறையாடியதன் பின்னர் அனைவரினதும் இணக்கத்துடன் மாதாந்த சம்பளத்தினை 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை உயர்த்தி வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை முன்பள்ளி பணியகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4000மாக உயர்த்தி அவர்களுக்கான வேதனம் வழங்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் யுத்த நிலையில் பாதிக்கப்பட்ட இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு பல்வேறுபட்ட கஸ்டங்களுக்கு மத்தியில் நீண்டதூரம் பயணித்து தங்களது பணிகளை செய்து வருகின்றன ஆசிரியர்களின் வேதனத்தோடு இவர்கள் தொடர்பான இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்கைகளை எடுப்பதாகவும் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அத்துடன் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவர்களுக்கான பொது வேலைத்திட்டம் ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகளை வழங்குமாறு மாகாண சிறுவர் பணியகத்திற்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் திருகோண மலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.
இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்து பண்டா, மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவர் எம்.எஸ்.உதுமான் லெவ்வை உள்ளிட்ட மாகாணத்திற்கு பொறுப்பான காலாசார விளையாட்டு திட்டமிடல் பிரிவுகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியின் உச்சத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் -
Reviewed by Author
on
February 08, 2019
Rating:

No comments:
Post a Comment