முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்!
ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே இதுவரை சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. தற்போது 4வது நாடாக இந்த பட்டியலில் இஸ்ரேல் இணைந்துள்ளது.
‘பெரிஷீட்’ எனும் விண்கலத்தை முதன் முறையாக சந்திரனுக்கு இஸ்ரேல் அனுப்புகிறது. இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது. பால்கன் 9 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவெரலில் இருந்து ஏவப்படுகிறது.
இந்த தகவலை இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த விண்கலம் கட்டுப்பாட்டு மையம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் அருகேயுள்ள யெகுட் நகரில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இஸ்ரேல் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஷ் ஐ.எல்’ தலைவர் மோரிஸ்கான் கூறுகையில்,
‘சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.
சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன. தற்போது அதில் நாங்களும் இணைகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ‘நாசா’வுடன் இணைந்து இஸ்ரேல் அனுப்பும் இந்த விண்கலத்தில் வீரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்!
Reviewed by Author
on
February 20, 2019
Rating:
No comments:
Post a Comment