மன்னார்-தேசிய தாய் மொழி தினத்தை முன்னிட்டு மாணவர்களால் விழிப்புணர்வு பேரணி -படங்கள்
தேசிய தாய் மொழி தினத்தை முன்னிட்டு மன்/அல் அஸ்ஹர் தேசியபாடசாலை மாணவர்களினால் இன்று 21-02-2019 காலை விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது.
தேசிய ரீதியில் இன்று தேசிய தாய் மொழி தினமானது அனைத்து பாடசாலைகளிலும் இடம் பெறுகின்றது இந்த நிலையில் தமிழ் மொழியினதும் தாய் மொழியின் மகத்துவத்தையும் வெளிகொண்டுவரும் முகமாக மன் அல் அஸ்ஹர் பாடசாலை மாணவர்கள் இன்று 21-02-2019 பாடசாலை வளாகத்தில் இருந்து குறித்த பேரணியானது ஆரம்பம் ஆகி இடம் பெற்றது
குறித்த ஊர்வலமானது மன்னார் பிரதான சாலை ஊடக மன்னார் மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் நகரசபை ஆகிய அரச அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு தரிசித்தும் மீண்டும் ஊர்வலமாக பாடசலையை அடைந்தமை குறிப்பிடதக்கது.
அத்துடன் மொழி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளினையும் ஏந்தியவாறு மாணவர்கள் மாணவிகள் ஊர்வலமாக சென்றமை குறிப்பிட தக்கது.

மன்னார்-தேசிய தாய் மொழி தினத்தை முன்னிட்டு மாணவர்களால் விழிப்புணர்வு பேரணி -படங்கள்
Reviewed by Author
on
February 21, 2019
Rating:

No comments:
Post a Comment