வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களே தயவுசெய்து பணம் கொடுக்காதீங்க! தமிழக ஆளுநரின்கோரிக்கை -
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வெளியாகவுள்ளதால், இதற்கான கூட்டணி பேச்சு வார்த்தை அரசியல் கட்சிகளிடையே பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இதில் ஒரு சில கட்சிகளின் கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில், சில காட்சிக்ளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வெளிநாடு வாழ் இந்தியர்கள் யாரும் அரசியல் கட்சிகளுக்குப் பணம் அளிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்தியாவில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதனால் அரசியல் கட்சிகள், வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் நிதி கேட்பார்கள். அப்படி நிதி கேட்கும் அரசியல் கட்சிகளுக்கு யாரும் பணம் கொடுக்காதீர்கள்.
அப்படி நீங்கள் பணம் கொடுத்தால், அது ஓட்டுக்களை பெறத்தான் இருக்குமே தவிர மக்களுக்கு உதவும் வகையில் இருக்காது.
மக்களுக்கு உதவ நினைத்தால், தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளித்து உதவுங்கள் என்று கூறியுள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களே தயவுசெய்து பணம் கொடுக்காதீங்க! தமிழக ஆளுநரின்கோரிக்கை -
Reviewed by Author
on
February 21, 2019
Rating:
No comments:
Post a Comment