மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது-படம்
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று புதன் கிழமை 15-05-2019 இரவு குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (16) காலை மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் பெரிய பண்டிவிருச்சான் பகுதியில் குடும்பத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்குடும்பத்திலுள்ள தந்தைக்கும் மகனுக்கு இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை சற்று நேரத்தின் பின்னர் மறைத்து வைக்கப்பட்ட புதிய கைக்குண்டு ஒன்றினை எடுத்து வீட்டுக்குச் சென்று வெடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்.
குறித்த சம்பவத்தை அவதானித்த அப்பகுதி ஊடகவியலாளர் ஒருவர் இச்சம்பவத்ததை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், கிராம அபிவிருத்திச்சங்கம் உடனடியாக மடு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் தேடுதல் சோதனை மேற்கொண்ட பாலம்பிட்டி 317 ஆவது படையினர் கைக்குண்டை எடுத்து வந்த 55 வயதுடைய பெரிய பண்டிவிரிச்சான் பகுதியைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டையும் மீட்டுள்ளனர். இச்சம்பத்தையடுத்து பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் பெரிய பண்டிவிருச்சான் பகுதியில் குடும்பத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்குடும்பத்திலுள்ள தந்தைக்கும் மகனுக்கு இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை சற்று நேரத்தின் பின்னர் மறைத்து வைக்கப்பட்ட புதிய கைக்குண்டு ஒன்றினை எடுத்து வீட்டுக்குச் சென்று வெடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்.
குறித்த சம்பவத்தை அவதானித்த அப்பகுதி ஊடகவியலாளர் ஒருவர் இச்சம்பவத்ததை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், கிராம அபிவிருத்திச்சங்கம் உடனடியாக மடு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் தேடுதல் சோதனை மேற்கொண்ட பாலம்பிட்டி 317 ஆவது படையினர் கைக்குண்டை எடுத்து வந்த 55 வயதுடைய பெரிய பண்டிவிரிச்சான் பகுதியைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டையும் மீட்டுள்ளனர். இச்சம்பத்தையடுத்து பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது-படம்
Reviewed by Author
on
May 16, 2019
Rating:

No comments:
Post a Comment