அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் இந்து எழிச்சி மாநாடு -படங்கள்

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து மக்களே எழிச்சி கொள் எனும் தொணிப்பொருளில் மாபெரும் இந்து எழுச்சி மாநாடு இன்று காலை 8 மணிக்கு மன்னார் பலத்தடியில் இருந்து நடராஜர் சிலையானது மன்னார் நகர சபை மண்டபம் வரை பேரணியாக கொண்டுவரப்பட்டு மன்னார் நகரசபை மண்டபத்தில் ஆரம்பம் ஆனது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாற்று மதத்தின் இடையூறுகள் இன்றியும் மாற்று மத மக்களுக்கு இடையூறு இன்றியும் வாழ்வது தொடர்பாகவும் இந்து நீதி இந்துக்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் பெருகின்றது என்பது தொடர்பாகவும் இவ் மாநாட்டில்
எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த எழுச்சி மாநாட்டில்  சிறப்பு அழைப்பாளர்களாக சின்மியா மிஷன் சுவாமிகள், தென் கைலை ஆதீணம் ,செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் ,தமிழருவி த.சிவகுமாரன், செந்தமிழ் சொல்லருவி லலீசன் (விரிவுரையாளர்), திரு S.S இராமகிருஷ்ணன் இந்து குருமார் மகா சபை திரு. A.I.தவமணி திருக்கேதீஸ்வர ஆலயபணிச்சபை பொருலாளர் இந்து ஆலய குருக்கள் இந்து அதிபர்கள் அறநெறி ஆசிரியர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் குறித்த நிகழ்வில் இந்து சமயமும் திருக்கேதீஸ்வரத்தின் தொண்மையும் ,பாலாவியின் புனிதம், மன்னாரும் இந்து மதமும் போன்ற  தொணிப்பொருட்களில் விரிவுரைகள் கருத்துரைகள் பேச்சுக்களாக வழங்கப்பட் குறிப்பிடதக்கது.
 













மன்னாரில் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் இந்து எழிச்சி மாநாடு -படங்கள் Reviewed by Author on September 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.