இலங்கைக்குக் கொடுத்த கால அவகாசத்தை உடனே முடிவுறுத்தவேண்டும் ஐ.நா.–மனித உரிமைகள் ஆணையாளருக்கு மனு
நீதியையும் பொறுப்புக் கூறலையும் சாத்தியப்படுத்த அவசியமான அரசியல் விருப்பு இலங்கை அரசிடம் இல்லை என்பதால் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் இனிவரும் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு வழங்கிய கால அவகாசத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்திக் காணாமல்போனோரின் உறவினர்களால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட் அம்மையாருக்கு மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் ஐந்து அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மனு நேற்றுக் காணாமல்போனோரின் உறவினர்களால் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டது.
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதன் பின்னர் இந்த மனு கையளிக்கப்பட்டது.
இலங்கைக்குக் கொடுத்த கால அவகாசத்தை உடனே முடிவுறுத்தவேண்டும் ஐ.நா.–மனித உரிமைகள் ஆணையாளருக்கு மனு
Reviewed by Author
on
December 13, 2019
Rating:

No comments:
Post a Comment