அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றம்.! தடுப்பூசிகளுக்கான மனித சோதனைகளுக்கு சீனா ஒப்புதல் -


கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான இரண்டு தடுப்பூசிகளுக்கான ஆரம்ப கட்ட மனித பரிசோதனைகளுக்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளை பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நாஸ்டாக்-பட்டியலிடப்பட்ட சினோவாக் பயோடெக் பிரிவு மற்றும் அரசுக்கு சொந்தமான சீனா தேசிய மருந்துக் குழுவின் இணை நிறுவனமான வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிகல் ப்ராடக்ட்ஸ் உருவாக்கியுள்ளது.
மார்ச் மாதத்தில், இராணுவ ஆதரவுடைய சீனாவின் இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் ஹாங்காங்கில் பட்டியலிடப்பட்ட பயோடெக் நிறுவனமான கன்சினோ பயோ ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான மற்றொரு மருத்துவ சோதனைக்கும் சீனா அனுமதி கொடுத்துள்ளது.

ஏப்ரல் 13 அன்று சீனா 89 புதிய கொரோனா வைரஸ் வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது, முந்தைய நாள் 108 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.86 வழக்குகள் வெளிநாடுகளிலிருந்து வந்ததாக தேசிய சுகாதார ஆணையம் கூறுகிறது. அவற்றில் பல வழக்குகள் ரஷ்யாவின் எல்லையான வடகிழக்கு மாகாணமான ஹெய்லோங்ஜியாங் வழியாக வந்தவர்களாம்.

சீனாவில் இப்போது உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 82,249 ஆக உள்ளது. தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 3,341 ஆக உள்ளது, ஏப்ரல் 13 அன்று புதிய இறப்புகள் ஏதும் ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வருகை தரும் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றம்.! தடுப்பூசிகளுக்கான மனித சோதனைகளுக்கு சீனா ஒப்புதல் - Reviewed by Author on April 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.