கொரோனா வைரஸ் தொற்று! இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் பலி -
இலங்கையை பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
52 வயதான சுமித் பிரேமச்சந்திர என்பவரே இன்று காலை மெல்போர்னில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கொழும்பு வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவர் எனவும் கூறப்படுகின்றது. இவர் அங்கு சமையல்காரராக பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 67 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையிலும், 175 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று! இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் பலி -
Reviewed by Author
on
April 06, 2020
Rating:

No comments:
Post a Comment