வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம்.
கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதால் சுனாமி அபாயம் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லையென அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை. இது சாதாரணமானது, அபாய நிலமை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமல்ல.
இந்நிலமை கடந்த ஆண்டும் ஏற்பட்டது. அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லை இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.
தற்பொழுது தாழமுக்க நிலை காணப்படுவதனால் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கடல் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
எனவே மக்கள் வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம்.
Reviewed by NEWMANNAR
on
May 16, 2020
Rating:

No comments:
Post a Comment