உத்தரவை மீறினால் பிரித்தானியர்களுக்கு 10,000 பவுண்ட்ஸ் வரை அபராதம்!
செப்டம்பர் 28 முதல் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதித்தால் அல்லது நெருங்கிய தொடர்பாகக் கண்டறியப்பட்டால் மக்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் அதிகரிப்பின் பின்னர் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என பிரதமர் கருதுவதால் இந்த நடைமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
நேற்று சனிக்கிழமை மேலும் புதிதாக 4,422 புபேருக்கு கொரோனா தொற்றும் 27 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
மேலும் ஸ்கொட்லாந்தில் மட்டும் 350 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது மே மாதத்திலிருந்து அதிகபட்ச நடழந்த அதிகரிப்பு என்றும் வேல்ஸில் 212 புதிய நோயாளிகளும் வடக்கு அயர்லாந்தில் 222 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உத்தரவை மீறினால் பிரித்தானியர்களுக்கு 10,000 பவுண்ட்ஸ் வரை அபராதம்!
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment