அண்மைய செய்திகள்

recent
-

கடலாமைகளை இறைச்சியாக்கிய நால்வர் அதிரடி படையிடம் சிக்கினர்

தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நால்வர் யாழ்ப்பாணம் – குருநகர் அண்ணாசிலை பகுதியில் வீடு ஒன்றில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அதிரடைப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குருநகர் பகுதியில் வீடு ஒன்றினை சோதனையிட்ட போது அங்கே நான்கு கடல் ஆமைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.

 அத்துடன் அந்த வீட்டில் இருந்த குருநகர் பகுதியை சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலாமைகளை இறைச்சியாக்கிய நால்வர் அதிரடி படையிடம் சிக்கினர் Reviewed by Author on September 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.