கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
பிட்டபெத்தர பகுதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பிட்டபெத்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
.
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment