துப்பாக்கிகளை பயன்படுத்தி வேட்டையாடிய நான்கு சந்தேக நபர்கள் கைது
சுங்காவில், மெதிரிகிரி பகுதியைச் சேர்ந்த 34, 32, 43 மற்றும் 50 வயதுடைய நால்வரை கைது செய்து சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் சோமாவதி காட்டுப்பகுதியில் மறை இறைச்சி 30 கிலோவுடன் நால்வரையும் கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கைளை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துவக்குகள் கோடாரி, மற்றும் வெடி மருந்துகளுடன் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் மறையொன்றினை வேட்டையாடி முப்பது கிலோ மறைஇறைச்சியை கொண்டு செல்வதற்கு முற்பட்ட வேளையிலே கைது செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர்களை சேருநுவர பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிகளை பயன்படுத்தி வேட்டையாடிய நான்கு சந்தேக நபர்கள் கைது
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment