யாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்
சந்தேக நபரிடம் நகைகளை வாங்கி அடகு வைத்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், கொள்ளையடித்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி முற்பகல் இடம்பெற்றது.
வீட்டில் இருந்தவர்கள் வேலைக்குச் சென்றிருந்த வேளை, வீடுடைத்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டன.
அவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்துக் கொடுத்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்கள் இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
யாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment