சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
நாளையதினம் (01.10) சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் காணாமல் போன தமது குழுந்தைகளுக்கு நீதி கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?, ´எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும் , இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள் , சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா, பாடசாலை சென்ற மாணவன் எங்கே´ போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சுமார் இரு மணிநேரங்கள் இடம்பெற்றிருந்ததுடன் போராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by Author
on
September 30, 2020
Rating:

No comments:
Post a Comment