அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்று இல்லாத 200 ஆவது நாள்!

தொடா்ந்து 200 ஆவது நாளாக யாருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படாத சாதனையை தாய்வான் எட்டியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: உலகின் பிற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தாய்வானில் அந்த நோய் பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 தொடா்ந்து 200 ஆவது நாளாக யாருக்கும் புதிதாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற சாதனையை அந்த நாடு வெள்ளிக்கிழமை எட்டியது. கடந்த 200 நாள்களாக அந்த நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 553 ஆகவும் பலி எண்ணிக்கை 7 ஆகவும் உள்ளது. இதன் மூலம், கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நியூஸிலாந்து, வியத்நாம் போன்ற மிகச் சில நாடுகளில் ஒன்றாக தாய்வான் திகழ்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று இல்லாத 200 ஆவது நாள்! Reviewed by Author on October 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.