அண்மைய செய்திகள்

recent
-

தீவிரமதவாத இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்!

“நாம் போரில் உள்ளோம். இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் முற்றாகஅழித்தொழிக்கப்படும். எங்களின் எதிரிகள் நாட்டிற்குள்ளும், வெளியிலும் உள்ளனர். நாட்டிலுள்ள அடிப்படைவாத, தீவிரமதவாத இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்‘” என Nice நகரின் தேவாலயத்திற்குள் நடாத்தப்பட்ட இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட்டார்மனின் (Gérald Darmanin) தெரிவித்துள்ளார்.

 சார்லி எப்தோவின் முன்னாள் அலுவலகம் மீதான தாக்குதல், Nice தாக்குதல், காவற்துறையினர் மீதான தாக்குதல் எனத் தொடர்சியான இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் வலுத்து வருகின்றன. அடிப்படை தீவிர மதவாத இஸ்லாமியர்கள் 14பேர் இதுவரை நாட்டை விட்டு வெளியெற்றப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில், மேலும் 18 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளனர் எனவும், உள்துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்

.
தீவிரமதவாத இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்! Reviewed by Author on October 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.