முல்லை ஊடகர்கள் மீதான தாக்குதல்; பிரதான நபர் அடங்கலாக இருவர் கைது!
தாக்குதலை மேற்கொண்ட கும்பலில் பிரதான நபரான அனோசன் என்பவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2வது சந்தேக நபரை 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் ஊடகவியலாளர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ஊடகச் சாதனங்கள், பணம் உள்ளிட்டவற்றை உடைமையில் வைத்து இருந்தார் என்ற குற்றச்சாட்டில், 2வது சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நால்வரில் அடையாளம் காணப்பட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் தேடப்படுகின்றனர்.
முல்லை ஊடகர்கள் மீதான தாக்குதல்; பிரதான நபர் அடங்கலாக இருவர் கைது!
Reviewed by Author
on
October 14, 2020
Rating:

No comments:
Post a Comment