அண்மைய செய்திகள்

recent
-

பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

பொதுமக்களுக்குத் தபால் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 அதன்படி , கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின் படி ஜனாதிபதி செயலகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்கள் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, பொதுமக்கள் வருகைத் தருவதன் ஊடாக ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் தபால் ஊடாகவும் தொலைப்பேசி ஊடாகவும் மக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் நோக்கில் இவ் வாறு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 அதன் படி ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு –
 தொலைபேசி- 0114354550 / 0112354550
 தொலைநகல்- 011 2348855,
 ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் – 0112338073, 
 ஜனாதிபதி நிதியம் – 0112354354 (4800 / 4814 / 4815 / 4818), 
 தொலைநகல்- 011 2331243

பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு Reviewed by Author on October 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.