“ மாவீரன் தியாகி திலீபனின் வரலாறை படமாக்குவதை விடுத்து துரோகியின் வரலாறைப் படமாக்காதே” – பாரதிராஜா
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த கண்டன அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“விஜய் சேதுபதிக்கு மக்கள் அதீத அன்பை வெகுசீக்கிரமே கொடுத்துள்ளனர்.
அவருடைய இயல்பான பேச்சும், யதார்த்தமான நடிப்பும் பாராட்டுக்கிரியது. அவர் இன்னும் வெற்றி பெறவே வாழ்த்துகிறேன்.
நிற்க.
அவர் செய்யவிருக்கும் ‘800’ என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். ஈழத்தமிழ் மக்கள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முரளிதரன். சிங்கள இனவாதத்தை முழுமையாக ஆதரித்தவர். விளையாட்டில் சாதனை படைத்தாலும் தன் சொந்த மக்கள் செத்த போது சிரித்தவர் சாதித்துத் தான் என்ன பயன்?
ஒரு இனவெறுப்பாளனின் முகத்தை உங்கள் முகமாக காலம் காலமாக நாம் வெறுப்போடு பார்க்க விரும்பவில்லை.
இந்தப் படத்தைத் தவிருங்கள். இது உலகத்தமிழர் சார்பாக எனது வேண்டுகோள்” என்றுள்ளார்.
மேலும், குறித்த படக்குழுவை சாடியுள்ள பாரதிராஜா,
” முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி. துரோகியின் வரலாற்றைப் படமாக்க வேண்டாம்.
நீங்கள் படம் எடுக்க விரும்பின் அஹிம்சை வழியில் போராடி வீழ்ந்த மாவீரன் தியாகி திலீபனின் வரலாறைப் படமாக்குங்கள். இல்லையேல் அந்த மகத்தான மாவீரர் தலைவனைப் படமாக்குங்கள். நாங்கள் இலவசமாக வந்து வேலை செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் பாரதிராஜா.
“ மாவீரன் தியாகி திலீபனின் வரலாறை படமாக்குவதை விடுத்து துரோகியின் வரலாறைப் படமாக்காதே” – பாரதிராஜா
Reviewed by Author
on
October 15, 2020
Rating:

No comments:
Post a Comment