அமெரிக்காவில் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை
ஆனால் அந்த வாலிபர் பொலிஸாரை நோக்கி முன்னேறி வந்ததால் அதிகாரிகள் 2 பேரும் அவரை துப்பாக்கியால் பலமுறை சுட்டனர். இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
விசாரணையில் கறுப்பினத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் வால்டர் வாலஸ் (வயது 27) என்பது தெரியவந்தது.
இதற்கிடையில் பொலிஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அந்நகரில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி பொலிசாருக்கு எதிராக போராடினர். இந்தப் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. கற்கள், கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்டவற்றால் பொலிசாரை தாக்கிய போராட்டக்காரர்கள் பொலிசாரின் கார்களுக்கும் தீ வைத்தனர். இந்த வன்முறையில் பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த நகரின் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.
அமெரிக்காவில் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை
Reviewed by Author
on
October 29, 2020
Rating:

No comments:
Post a Comment