இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்
இந்த விவகாரம் குறித்த புலனாய்வு விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள அவர், விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அண்மையில், துருக்கியில் இருந்து ஸ்ரீலங்கா வந்த உக்ரைன் விமான ஊழியர்களாலேயே கொரோனா வைரஸ் மீண்டும் பரவியது எனவும், இதுவே 2ஆம் அலையின் ஆரம்பப்புள்ளி எனவும் சிங்கள தேசிய நாளிதழொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் உண்மை தன்மை எவ்வாறு என்ற சந்தேகம் பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ள நிலையில், கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரான இவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்
Reviewed by Author
on
October 29, 2020
Rating:

No comments:
Post a Comment