அண்மைய செய்திகள்

recent
-

இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் ஆரம்பப்புள்ளி தொடர்பான தகவல்கள் உரிய வகையில் - விரைவில் வெளியிடப்படும் என இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  

 இந்த விவகாரம் குறித்த புலனாய்வு விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள அவர், விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார். அண்மையில், துருக்கியில் இருந்து ஸ்ரீலங்கா வந்த உக்ரைன் விமான ஊழியர்களாலேயே கொரோனா வைரஸ் மீண்டும் பரவியது எனவும், இதுவே 2ஆம் அலையின் ஆரம்பப்புள்ளி எனவும் சிங்கள தேசிய நாளிதழொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் உண்மை தன்மை எவ்வாறு என்ற சந்தேகம் பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ள நிலையில், கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரான இவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல் Reviewed by Author on October 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.