அண்மைய செய்திகள்

recent
-

நியூசிலாந்து ஆக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

நியூசிலாந்து மாவீரர் பணிமனையால் ஆக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக 2020 ஆம் ஆண்டு மாவீர்ர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது மாலை 7.05 மணிக்கு பொதுச்சுடரினை வைத்திய கலாநிதி வசந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கொடியை தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். திரு. மாறன் அவர்ளும், தமிழீழ தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் வரதன் அவர்களும் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரை கப்டன் பேரின்பநாதனின் அக்கா ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாவீரர் கானம் ஒலிக்க மக்கள் மாவீரர்களின் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள். கலைநிகழ்வுகளை திருமதி. 

இந்திரா பத்மநான் அவர்கள் ஒருங்கிணைத்தார். மாவீரர்களை. நெஞ்சிருத்திய நடனங்கள் மற்றும் கவிதைகளை இளயதலைமுறைச் சிறார்கள் நிகழ்தினார்கள். வைத்தியக்கலாநிதி வசந்தன் அவர்களின் சிறப்புரையும் செயற்பாட்டாளர் குருபரன் அவர்களின் உரையும் இடம்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக நியூசிலாந்து அகதிகள் மற்றும் கலாச்சார அமைப்புகளின் இயக்குனர் மதிப்பிற்குரிய திரு அகிலிலு அவர்கள் சிறப்புரையாற்னினார் . அவர் தனது உரையில் தான் எரித்திரிய நாட்டைச்சேர்ந்தவரென்றும் அதனால். ஈழத்தமிழர்களினதும் எமது விடுதலைப்போராட்டினதும் உணர்வுகளை தங்களால் உணரமுடியுமென்றும் கூறினார். நாம்தமிழர் அமைப்பின் நியூசிலாந்திற்கான அமைப்பாளர் பிரதீப் அவர்களின் உணர்வான உரையும் இடம்பெற்றது.






நியூசிலாந்து ஆக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் Reviewed by Author on November 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.