அண்மைய செய்திகள்

recent
-

யாழில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு ஆபத்து! வெளியான தகவல்

யாழ். மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவினைப் பதிவு செய்வதற்கு கைவிரல் அடையாள கருவி பயன்படுத்தப்படுவது குறித்து உத்தியோகத்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அதிகமாக பரவிவரும் தற்போதைய காலக்கட்டத்தில் கைவிரல் அடையாளம் பதிவு செய்தல் தமக்கு பாதிப்பாக அமைகின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 யாராவது ஒரு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் அது அனைவரையும் பாதிக்கும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களில் வரவுப் பதிவேடு மாத்திரமே இருந்தது. நிர்வாக உத்தியோகத்தர்கள் காலை 9.00 மணிக்கும் மதியம் 12.30 மணிக்கும் சிவப்பு அடிக்கோடிடுவர். 

 இதன்மூலம் நேர்த்தியாக வரவு பதிவுசெய்யப்பட்டது எனவும் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் இயந்திரங்களை நிறுத்திவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்

.
யாழில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு ஆபத்து! வெளியான தகவல் Reviewed by Author on November 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.