இன்றும் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்: சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளது.
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் 44 பேரும், திருகோணமலையில் 13 பேரும் கல்முனையில் 18 பேரும் அம்பாறையில் 6 பேரும் கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும், சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்துள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்றும் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்: சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment