ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழந்தமை உறுதியானது
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நேற்றிரவு நடத்தியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
குறித்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதனை உடனடியாக ஈரான் உறுதிப்படுத்தியிருக்கவில்லை.
இந்நிலையில். உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்திருப்பதாக Mazoud Pezeshkian உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழந்தமை உறுதியானது
Reviewed by Vijithan
on
March 18, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 18, 2026
Rating:


No comments:
Post a Comment