புரவி புயலால் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
அதிகப்படியாக துணுக்காய் மாந்தை கிழக்கு பிரதேசங்களிலேயே இந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் குறித்த பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலே நேற்று மாலை 4.30 மணிவரையான தகவல்களில் அடிப்படையில் 601 குடும்பங்களை சேர்ந்த 1796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் இ.இலிங்கேஸ்வரகுமார் தெரிவித்தார்.
இதனடிப்படையில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 210 குடும்பங்களை சேர்ந்த 533 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 181 குடும்பங்களை சேர்ந்த 619 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 43 குடும்பங்களை சேர்ந்த 143 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த20 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 123 குடும்பங்களை சேர்ந்த 384 பேரும் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களை சேர்ந்த 97 பேருமாக மொத்தமாக 601 குடும்பங்களை சேர்ந்த 1796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புரவி புயலால் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
Reviewed by Author
on
December 04, 2020
Rating:
Reviewed by Author
on
December 04, 2020
Rating:


No comments:
Post a Comment