அண்மைய செய்திகள்

recent
-

பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல், ஊரடங்கிற்கு தேவை ஏற்படாது

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்து, பிரதேசங்களை தனிமைப்படுத்தவோ, ஊரடங்கு உத்தரவை அமுலாக்கவோ தேவை ஏற்படாது என தாம் எதிர்பார்ப்பதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக கொவிட் - 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கையில், கடந்த 51 நாட்களாக முடக்கப்பட்டிருந்த சில வீடமைப்புத் திட்டங்களில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட ஆறு வீடமைப்புத் தொகுதிகள் சார்ந்த பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலாகிறது. 

 அந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை பெறுபேறுகளுக்கு அமைய எதிர்காலத்தில் அவற்றையும் நீக்குவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்

.
பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல், ஊரடங்கிற்கு தேவை ஏற்படாது Reviewed by Author on December 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.