அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் இரண்டு சிறுவர்களுக்கு நடந்த கொடுமை -சுய நினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக சட்டவிரோத தாயாரிப்பான கசிப்பு பருக்கப்படட நிலையில் சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நேற்று முன்தினம் (28) அதிகளவான கசிப்பு பருக்கப்பட்டதனால் இரண்டு சிறுவர்களும் சுயநினைவு அற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  வலுக்கடடாயமாக சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கியமை தொடர்பாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் இரண்டு சிறுவர்களுடைய பெற்றோர் முறைப்பாட்டை செய்துள்ளனர் தமக்கு கசிப்பு பருக்கிய சம்பவத்துடன் பலர் (சுமார் 8 பேர்) உள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சிறுவர்களின் பெற்றோர்கள் கோரியுள்ளனர் குறித்த சிறுவன் ஒருவனின் பெற்றோர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், குறித்த முறிப்பு பகுதி கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் ,மரக்கும்பல்கள் கடத்தல்காரர்கள், மற்றும் வாள்வெட்டுக்காரர்கள் உள்ள இடமாக மாறியுள்ளது. 

 இதனால் ஊருக்கு செல்வதற்கு பயமாக உள்ளது எனத் தெரிவித்தார். இதேவேளை பொலிஸாரின் விசாரணையில் நேற்று முன்தினம் (28) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று (29) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர் டிசம்பர் 3 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

முல்லைத்தீவில் இரண்டு சிறுவர்களுக்கு நடந்த கொடுமை -சுய நினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Author on December 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.