அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அரசே காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களுக்கு பதில் என்ன?, அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பே கிடையாதா, முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை எரிக்காதே, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு’ உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், புதிய மாக்ஸிச லெனின் கட்சியின் முக்கியஸ்தர்களான டொன்பொஸ்கோ, பிரதீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
Reviewed by Author
on
January 03, 2021
Rating:

No comments:
Post a Comment