அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாய் கூடு ஒன்றை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய நபரை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பயனளிக்காது அவர் உயிரிழந்துள்ளார். 

தற்போது பிரேத பரிசோதனைக்காக உடல் கிளிநொச்சி வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் மின்சாரசபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! Reviewed by Author on February 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.