நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம் இல்லை – இராணுவத் தளபதி
நாட்டை முடக்குவதாக வதந்திகள் பரவுகின்றதாகவும் இதுவரை அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி, எதிர்வரும் நாட்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய தகுந்த நடவடிக்கைகள், சுகாதார தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விழாக்கள் ஏற்பாடு செய்வது மற்றும் அவற்றில் பங்குபற்றுவது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்து புதிய திட்டங்களை வகுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபது கூறியுள்ளார்.
நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம் இல்லை – இராணுவத் தளபதி
Reviewed by Author
on
February 14, 2021
Rating:

No comments:
Post a Comment