38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட 7 பேர் கைது
இதன்போது திருக்கோணமலை – கோணேஸ்வரம் கடற்பகுதியில் படகு ஒன்றில் வந்துள்ள கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையிட்டு மீண்டும் படகிலேயே தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (25) இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது திருகேணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இந்த கொள்ளையைத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் பல்வேறு குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாகியுள்ள ஐஸ் மஞ்சு எனப்படும் சந்தேக நபரின் சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள பொலிஸார் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றும் 6 தோட்டாக்கள் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட 7 பேர் கைது
Reviewed by Author
on
February 26, 2021
Rating:

No comments:
Post a Comment